ஐவர்பாடியில் ஆட்சி செய்கிறாய்
ப்ரத்யங்கிரா தேவி..
பௌர்ணமி நிலவாய் காட்சி தருகிறாய்
அமாவாசை இரவில்…(2)
சிங்க முகம் கொண்ட மேனியிலே
தங்க மனம் கொண்டு வந்தாய் (2)
எங்கள் குறைதீர்த்து வாழ்விலே
மங்கலங்களே தந்தாய் !
கோரஸ்:
ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா !
ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா ! (2)
Charanam 1
—————–
“காரம்” குணம் கொண்ட மிளகாயால்
யாகம் செய்கின்ற போதும்…
கமரல் இல்லாமல் அதைஏற்கும்
அதிசயம் போலிலை ஏதும்…(2)
உக்ர நரசிம்மர் உச்ச கோபத்தை
தணிக்க வந்தவள் நீயே ! (2)
உக்ரம் ஏற்றுமோ மூட்டை மூட்டையாய்
மிளகாய் கொட்டியும் தாயே? (2)
கோரஸ்:
ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா !
ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா ! (2)
Charanam 2
—————–
பாண்டவர் ஐவரும் தேவிஉனை
பணிந்து போற்றியே துதி பாடி…
வேண்டியதாலே போரினிலே
நாட்டினாரே வெற்றிக் கொடி (2)
பரம சிவனாரின் சரப ரூபத்தில்
சிறகில் தோன்றினாய் நீயே ! (2)
பதங்கள் தொழுவாரை வாழ்வில்
வெற்றியில் பறந்திட செய்திடு வாயே ! (2)
கோரஸ்:
ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா !
ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா ! (2)
ஐவர்பாடியில் ஆட்சி செய்கிறாய்
ப்ரத்யங்கிரா தேவி..
பௌர்ணமி நிலவாய் காட்சி தருகிறாய்
அமாவாசை இரவில்..
சிங்க முகம் கொண்ட மேனியிலே
தங்க மனம் கொண்டு வந்தாய்
எங்கள் குறைதீர்த்து வாழ்விலே
மங்கலங்களே தந்தாய் !
கோரஸ்:
ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா !
ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா ! (2)