ஸ்ரீ வரலட்சுமி தமிழில்
பல்லவி
————–
————–
ஸ்ரீ வரலட்சுமி வணங்கினேன் ! செல்வம் அருள்..
நின் பூமலர்பதம் மலர்பதம் பதமே
நின் பூமலர்பதம் மலர்பதம் பதமே
சரண் சரண்
(ஸ்ரீ வரலட்சுமி)
அனுபல்லவி
————–
காமனின் தந்தையின் அன்பு துணைவியே ! பொன்..னே…!
கோடி சூர்யன் போலான ஒளியே !
பக்தர்க்கு எளிதே !
நாடுவோர் தனைக் காத்தருளும்..
தாமரை பூவிளம் கொடியே !
கேடிலா நற் குணவதியே !
கேசவன் உளம் உறைவாயே !
(ஸ்ரீ வரலட்சுமி)
சரணம்
————
ஆவணி பௌர்ணமி முன் வெள்ளிக் கிழமையில்
சாருமதி தொடங்கிய பூஜையை செய்தோம்..
தேவாதி தேவர் தந்த மணிமாலையை சூடிடும் தேவி !
தீனருக்கருள் செய்திடும் நல் வித்தகி, பொன்மனச் செல்வி !
தீனருக்கருள் செய்திடும் நல் வித்தகி, பொன்மனச் செல்வி !
நிலையிலா எண்ணம் அறிவாய் !
கலைகளின் தேவி வணங்குவார் !
கைவல்யம் அருளுபவளே!
கைமேல் பலன் தருபவளே!
கைமேல் பலன் தருபவளே!
(ஸ்ரீ வரலட்சுமி)