ஸ்ரீ சத்யநாராயணா ஆரத்தி தமிழில்
ஓம் ஜெய லட்சுமி ரமணா ! – ஸ்வாமி
ஸ்ரீ லட்சுமி ரமணா !
சத்ய நாராயண சுவாமி !
தடைகளை உடைத்திடுவாய் !
ஸ்ரீ ஜெய லட்சுமி ரமணா !
ரத்தினம் பதித்தசிம் மாசனம்
அற்புதம் உன் ராஜ்யம் !
மிக அற்புதம் உன் ராஜ்யம் !
நாரதர் செயும்திரு மஞ்சனம் !
கேட்குமே மணி நாதம் !
ஸ்ரீ ஜெய லட்சுமி ரமணா !
கலியுகக் காரணா ! பூரணா !
ஏழைக்கும் காட்சி தந்தாய் ! – ஒரு
ஏழைக்கும் காட்சி தந்தாய் !
முதிய அந்தணன் ஆகி…-ஒரு
முதிய அந்தணன் ஆகி…
பொன் பொருள் அருள் செய்தாய் !
ஸ்ரீ ஜெய லட்சுமி ரமணா !
காட்டினில் திரிபவன், வறியவன்
அவனுக்கும் தயை செய்தாய் !- சுவாமி
அவனுக்கும் தயை செய்தாய் !
நாட்டின் மன்னன் சந்திரசூடன்
அவனுக்கும் அருள் செய்தாய் !
ஸ்ரீ ஜெய லட்சுமி ரமணா !
வைசியன் மனதினை மாற்றியே
பக்தியை நீ தந்தாய் ! – பெரும்
பக்தியை நீ தந்தாய் !
வையக வாழ்வினில் அவனுக்கு
வளமருள் நீ செய்தாய் !
ஓம் ஜெய லட்சுமி ரமணா !
வைசியன் பக்தியை சோதிக்க
முதியவன் போல் சென்றாய் ! – ஒரு
முதியவன் போல் சென்றாய் !
இலைகளை தழைகளை மாற்றி
பெரும் செல்வம் செய்தாய் !
ஓம் ஜெய லட்சுமி ரமணா !
மன்னவன் காட்டினில் வணங்கினான்
இடையர்கள் அவருடனே…-ஆயர்
குலத்தினர் அவருடனே..
நினைத்தது யாவையும் அடைந்தான் !
தயாள ஹரி உன்னால் !
ஓம் ஜெய லட்சுமி ரமணா !
படைக்கிறோம் நீ மிக விரும்பும்
வாழைப் பழங்களையே ! – நீ
விரும்பிடும் பழங்களையே !
தூபம், தீபம், துளசி
சேர்த்தோம் ஏற்பாயே !
ஓம் ஜெய லட்சுமி ரமணா !
லட்சுமி ரமணனுன் ஆரத்தி
பாடிடுவார் எவரோ ! – சுவாமி
பாடிடுவார் எவரோ !
செல்வ வளம், சு
- கம் பெறுவார் !
வாழ்நாள் முழுவதுமே !
ஓம் ஜெய லட்சுமி ரமணா !