ஸ்ரீ சாரதா ஸ்தோத்திரம் தமிழில்

1)
காஷ்மீரத்தில் உறைபவளே !
சாரதா தேவியே வணங்குகிறேன்!
அனுதினம் உன்னைத் துதிக்கின்றேன் !
- அறிவுச் செல்வம் அருள்வாயே !
2)
நான்முகன் துணையே ! வாக்தேவி !
ஞான வடிவான கலைவாணி !
நாவின் நுனியிலே குடியிருந்து
நலன்களும், அமைதியும் தருபவளே !
3)
காரிருள் நாயகன் சந்திரனை
கார்குழல் தன்னில் சூடிடுவாய் !
பவானி தேவி என்றாகி
பவபயம் தீர்க்கும் நதியானாய் !
4)
அறிவைச் செறிவூட்டும் யாவைக்கும்
அருமறை வேதாந்தங்களுக்கும்
திருவடிவான சரஸ்வதியே!
பத்ரகாளியே ! பணிகின்றேன்
5)
ஞான ஒளிவீசும் நிரந்தரியே
ஞானம் யாவைக்கும் அதிபதியே
உண்மைப் பொருளான கலைவாணி
உன்னை மறுபடி வணங்குகிறேன்
6)
நீயிலை என்றால் இவ்வுலகு
ஜீவனில்லாத உடலாகும்
தாயே ! கலைகளின் நாயகியே
தலைவணங்கி நான் பணிகின்றேன்
7)
நீயிலை என்றால் இவ்வுலகு
உணர்விலா ஊமை ஆகிடுமே
தாயே
! வாக்கின் அதிபதியே
வாணி தேவியே வணங்குகிறேன்