வல்லமை தாராயோ? வாராஹி

வல்லமை தாராயோ வாராகி?
வல்லமை தாராயோ வாராகி? – உன்
வலிமையால் எந்தன் வலி நீக்கி ! (2)
நல்லவை யாவையும் ஒன்றாக்கி..(2).
நலமருள் செய்வாயோ தாயாகி ?
கோரஸ்:
ஜெய ஓம் வாராகி ! ஜெய ஓம் வாராகி !
ஜெய ஓம் வாராகி ஓம் !
ஜெய ஓம் வாராகி ! ஜெய ஓம் வாராகி !
ஜெய ஓம் வாராகி ஓம் !
(வல்லமை)
விரட்டும் பகையினை தொலைந்திட துரத்து !
அரட்டும் பகட்டினை முற்றிலும் அகற்று ! (2)
துரத்தும் தீவினைகள் யாவையும் தீய்த்து..(2)
தொடரும் மங்கலம் எனநீ மாற்று ! (2)
கோரஸ்:
ஜெய ஓம் வாராகி ! ஜெய ஓம் வாராகி ! ஜெய ஓம் வாராகி ! ஓம் !
ஜெய ஓம் வாராகி ! ஜெய ஓம் வாராகி ! ஜெய ஓம் வாராகி ! ஓம் !
(வல்லமை)
சரணம் 2
————
ஒளிந்து தலைதூக்கும் ஆணவம் அழித்து
என்னுள் மெய்ஞான விளக்கினை ஏற்று ! (2)
கழிந்திடும் நாளெல்லாம் உன்பதம் பணிந்து (2)
கழித்திடும் வரத்தினை இக்கணம் வழங்கு ! (2)
கோரஸ்:
ஜெய ஓம் வாராகி ! ஜெய ஓம் வாராகி ! ஜெய ஓம் வாராகி ! ஓம் !
ஜெய ஓம் வாராகி ! ஜெய ஓம் வாராகி
! ஜெய ஓம் வாராகி ! ஓம் !