ஸ்ரீ சூரியநாராயண சுப்ரபாதம் தமிழில்
திசைகளாம் கிழக்கிலும், மேற்கிலும் சஞ்சாரம் செய்பவனே !
அசைந்திடும், அசையாதிருக்கும் உயிர்களைக் காப்பவனே !
ஸ்ரீ சூர்ய நாரயணனே ! உலகநலன் காக்கவே எழுந்தருள்வாய் !
ஆறிரு ஆத்மனே ! மங்கலத்தின் திருத்தோற்றமே !
ஏழு குதிரைகள் தேரேறி உலகெலாம் பவனி வருபவனே !
மும்மூர்த்தியர் திருவுருவே ! மூவேளையும் தொழத்தக்கவனே !
திவாகரன் என்னும் ஸ்ரீ சூர்ய தேவ பகவானே !
திருக்கண் மலர்ந்தருள்வாய்!
அஞ்ஞான இருள்தன்னை விரட்டுவோனே !
மெய்ஞான ஒளியாலே உலகத்தை வளர்ப்பவனே !
ஞானமுடன், ஆரோக்யம், சௌபாக்யம் அருள்பவனே !
பானுதேவன் என்னும் ஸ்ரீ சூர்ய தேவ பகவானே !
திருக்கண் மலர்ந்தருள்வாய்!
தங்கமயமாக ஜொலிப்பவனே ! துயர்களைந்து காப்பவனே !
சிம்மராசிக்கு அதிபதியே ! தூயவனே !பாவங்கள் அழிப்பவனே !
மானிடர் செயல்களுக்கெல்லாம் சாட்சியாய் திகழ்பவனே !
சாயா தேவியின் மனம்கவர் துணையோனே!
ஸ்ரீ சூர்ய தேவ பகவானே ! திருக்கண் மலர்ந்தருள்வாய்!