ஸ்ரீ கால பைரவர் அஷ்டகம்
1)
தேவர்களின் தலைமகனாம் தேவேந் திரனும்..
தொழுதுஅடி பணிகின்ற கமலமலர் பாதம் !
நாரதரும் முனிவர்களும் பாடுவதுன் நாமம் !
முப்புரியாய் பூணுவதோ சீறிவரும் நாகம் !
கருணைமுகம் தாங்கும் சிரம் இளம்பிறையை சூடும் !
காசி நகர் நாயகனே திகம்பரனே சரணம் !
2)
ஆயிரமாய் ஆதவன்போல் ஜொலிக்கும்திரு மேனி !
மூவுலகும் காத்தருளும் திரிசூல பாணி !
மாயஉல கென்னும் கடல் தாண்டிவிடும் தோணி !
வேண்டியவை தந்தருளும் நீலகண்ட ஞானி !
ஆதி இலா அந்தமிலா முக்கண்ணனேநீ !
காசி நகர் நாயகனே நலமருள்வாய் சரணம் !
3)
சூலமுடன் பாசம், உடுக்கையுடன் மழுவும்
ஏந்திய திருக்கரனே ! கரி வதன உருவே !
காலமெலாம் கடந்தவனே ! அண்டமிதன் முதலே !
பீமபலம் கொண்டவனே ! பைரவனே ! ஈசா !
விந்தைமிகு தாண்டவத்தை விரும்பிடுமெம் நேசா !
காசி நகர் நாயகனே நலமருள்வாய் சரணம் !
4)
இகபரத்து சுகம் கொடுத்து முக்தியையும் அளிக்கும்
மங்கலமே கண்கவரும் உனதுஎழில் வதனம் !
அகமுவந்து அடியவரை அரவணைக்கும் உள்ளம் !
ஆள்கிறதே ! லோகமெலாம் உன்னடியில் தஞ்சம் !
அரைஅணிந்த தங்கமணி இன்னிசையை வார்க்கும் !
காசி நகர் நாயகனே நலமருள்வாய் சரணம் !
5)
தர்மவழி காப்பதுவே கடமையெனக் கொண்டோய் !
அதர்மவழி அழிப்பவனே ! பைரவனே ! ஈசா !
கர்மவினை பயனறுத்து இன்பம்தரும் நேசா !
காலமெலாம் நீதுணையே கருணைஉள தேவா !
பொன்அரவை மேனியிலே சுற்றிவலம் வருவோய்
காசி நகர் நாயகனே நலமருள்வாய் சரணம் !
6)
அற்புதனே ! பைரவனே ! உனது எழில் பாதம்…
ரத்தினங்கள் மின்னுகிற பாதுகைகள் சூடும் !
நிர்மலனே ! நிர்குணனே ! அந்தமிலா வடிவே !
இஷ்டமுடன் நாம்பணியும் பைரவனே ! ஈசா !
காலபயம் நீக்கிடுவாய் கோர பற்களாலே !
காசி நகர் நாயகனே நலமருள்வாய் சரணம் !
7)
இடிமுழக்க உன்சிரிப்பால் பிளந்து உடைபடுமே!
தாமரையில் தோன்றுகிற அண்டகோ சங்கள் !
விழியதனில் பாவங்களை தீர்த்தருளும் தேவா !
எட்டுவித சித்தி தரும் பைரவனே ! ஈசா !
கழுத்தினிலே மாலையென கபாலங்களை சூடும்
காசி நகர் நாயகனே நலமருள்வாய் சரணம் !
8)
காசிநகர் மாந்தர்களின் பாவபுண்ய கணக்கை
பார்ப்பவனே ! பூதகண கூட்டங்களின் நாதா !
நீதிவழி செல்வபவனே ! தொன்மைமிகு தேவா !
அண்டமெலாம் செய்தவனே ! பைரவனே ! ஈசா !
அகண்ட புகழ் அதையருளும் ஆண்டவனே ! நேசா !
காசி நகர் நாயகனே நலமருள்வாய் சரணம் !
9)
அகத்தினிலே இன்பமது மேலும் மேலும் பொங்கும் !
ஞானமுடன் முக்தியதும் சீக்கிரமே கூடும் !
சுகங்கள் எல்லாம் சேரும் ! சோதனைகள் தீரும் !
பைரவனின் அஷ்டகத்தை படிப்பவரின் வாழ்வில்
கால பைரவனின் திருவருளும் பூரணமாய் சேரும் !
பைரவனின் திருவருளும் பூரணமாய் சேரும் !