psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

நடராஜ தசகம் (Tamil)

🕉️ சிவபெருமான்
Translations

🎵 Watch/Listen on YouTube


 

 

1)

 

கனகசபா உறை, காந்த பொன் தேகனே !

காமனை வென்றவா ! சாம்பசிவா !

கலித்துயர் பாவங்கள் தீர்த்தருள் செய்பவா !

கரித்தோல் பூண்ட பரமசிவா !

நீலோத் பலமலர் நிறத்தினில் ரத்தினம்

பொதிந்ததோர் மகுடம் சூடியவா !

சகல சௌபாக்யமும் சாந்தமும் அருளிடும்

ஜெய ஜெய ஹே நடராஜ சிவா !

2)

 

கரத்தினில் சூலமும் ஏந்திடும் சூலா !

காலனை வென்றவா ! சாம்பசிவா !

பதமலர் போற்றிடும் அடியவர்க்கு (யா)வையும்

பரிவுடன் தருகிற பரமசிவா !

சிவனடியார்கள் வணங்கிடும் ஈசா !

சாம்பலைப் பூசிடும் சர்வேசா !

சகல சௌபாக்யமும் சாந்தமும் அருளிடும்

ஜெய ஜெய ஹே நடராஜ சிவா !

 

3)

 

ஹரஹர சங்கர உரைப்பவர் மனதினில்

உறைந்தருள் செய்திடும் சிதம்பரனே !

பிறருக்கு என்றும் தொல்லைகள் செய்யும்

தீயவர் பயம்கொள்ளும் ஹரசிவனே !

ஆயிரம் தலையினன் இதயத்தில் வாழ்ந்திடும்

அர்ஜுனன் குருவே குருசிவனே !

சகல சௌபாக்யமும் சாந்தமும் அருளிடும்

ஜெய ஜெய ஹே நடராஜ சிவா !

 

4)

 

மங்கலம் தந்திடும் அம்பிகை உடனுறை

சங்கரன் சிவனே ! எழில் உருவே !

இந்திரன் தொழுதிடும் மந்திர வடிவே !

ரகசிய ரூபனே ! தவ குருவே !

முரஹரன் மாலவன் அருள்தரும் சன்னதி

அருகினில் அருளிடும் ஹரசிவனே !

திரிபுரம் எரித்தவா ! பாவங்கள் எரித்தெமை

எதிரிகள் விலக்கி காத்திடவா !

சகல சௌபாக்யமும் சாந்தமும் அருளிடும்

ஜெய ஜெய ஹே நடராஜ சிவா !

 

5)

 

நீறினைப் பூசிடும் நாகா பரணனே !

நந்தி வாகனா ! உமை பதியே !

பேரெழில் நாட்டியம் ஆடிடும் பாதா !

உலகையே உடலாய் கொண்ட சிவா !

புத்திர பாக்யமும், சகல சௌக்யமும்

தந்திடும் தயாளா ! குண சீலா !

சகல சௌபாக்யமும் சாந்தமும் அருளிடும்

 

ஜெய ஜெய ஹே நடராஜ சிவா !

 

6)

 

இளம்பிறை சூடிய இறைவனே ! தேவா !

அனைத்துயிர் உறையும் ஜ‌க தீசா !

நலம்தரும் மந்திரத் திரு வடிவான‌

பூத கணம்சூழ் பர மேசா !

ப்ரம்மனும், விஷ்ணுவும் நார தாதியரும்

போற்றிடும் திருவே சிவ நேசா !

சகல சௌபாக்யமும் சாந்தமும் அருளிடும்

ஜெய ஜெய ஹே நடராஜ சிவா !

 

7)

 

மலைமகள் நல்கிய சந்தனம், சம்பகம்

குங்குமம் மணம்நிறை மேனி யனே !

திமி திமி திந்திமி எனுமொலி எழுப்பிடும்

பதம்தனில் நடனம் தந்த வனே !

தேவர்கள் மனம்மகிழ் ஆனந்த தாண்டவம்

ஆடிய பதனே ! குரு சிவனே !

சகல சௌபாக்யமும் சாந்தமும் அருளிடும்

 

ஜெய ஜெய ஹே நடராஜ சிவா !

 

8)

 

இமவான் புத்திரி பார்வதி பதியே !

நற்குணக் கடலே! அருள்நிதியே!

ஐங்கரன், அறுமுகன் போற்றிடும் சிவனே!

அழகிய பொன்நிற மேனியனே!

சூரியன் கண்எனக் கொண்ட எம்அரனே!

கோகுலக் கண்ணனின் சிநேகிதனே!

குவளயம் போற்றிடும் குரு சிவ பரனே !

கோபுர தரிசனம் தருபவனே !

சகல சௌபாக்யமும் சாந்தமும் அருளிடும்

 

ஜெய ஜெய ஹே நடராஜ சிவா !

 

9)

 

சிரத்தினில் சந்திரன் கரத்தினில் டமருகம்

அக்னியும் தாங்கிடும் பரமசிவா !

இந்திர பதம்தரும் சங்கர சிவனே!

அன்பர்கள் பிணிகளைத் தீர்ப்பவனே !

கையினில் மானும் காலடி அதனில்

ரோக தேவதை கொண்டவனை..

மெய்யென துதிசெய் அனுதினம் மனமே!

பார்வதி நாதன் ஹரசிவனே !

சகல சௌபாக்யமும் சாந்தமும் அருளிடும்

ஜெய ஜெய ஹே நடராஜ சிவா !

 

10)

 

பணிந்திடும் அடியவர்க் கருள்தரும் ஈசா !

பதஞ்சலி போற்றிய பரமசிவா!

வெம்புலி பாதரும் வணங்கிய தேவா!

நீல கண்டனே ! வேத சிவா !

டமருக ஒலிதரும் கலைகளின் நாதா !

ரகஸ்ய ரூபனே ! ஜடா தரா !

சகல சௌபாக்யமும் சாந்தமும் அருளிடும்

ஜெய ஜெய ஹே நடராஜ சிவா !

 

11)

 

ராம தீட்சிதர் அருளிய பாடலை

பக்தியாய் அனுதினம் படிப்பதனால்..

சேமங்

கள் யாவையும் சேர்ந்திடும் வாழ்வில்

விரும்பிடும் யாவும் கைகூடும் !

சகல சௌபாக்யமும் சாந்தமும் அருளிடும்

ஜெய ஜெய ஹே நடராஜ சிவா !