க்ஷேத்ரபாலபுரம் ஆனந்த பைரவர்

பல்லவி
———-
க்ஷேத்ரபாலபுரம் என்னும் க்ஷேத்திரம்..- அங்கு
ஆனந்த பைரவரின் சன்னிதானம்..! (2)
தாமரை மலர்போல் மலர்ந்த முகம்..
தாமரை மலர்மேல் அமர்ந்த சிவம் (2)
ஆனந்த கால பைரவம் – சிவ
ஆனந்த கால பைரவம்
———-
க்ஷேத்ரபாலபுரம் என்னும் க்ஷேத்திரம்..- அங்கு
ஆனந்த பைரவரின் சன்னிதானம்..! (2)
தாமரை மலர்போல் மலர்ந்த முகம்..
தாமரை மலர்மேல் அமர்ந்த சிவம் (2)
ஆனந்த கால பைரவம் – சிவ
ஆனந்த கால பைரவம்
சரணம் 1
———————-
காசிக்கு நிகரான புண்ய தலம்…
கங்கைக் கிணையான பஞ்ச தீர்த்தம்…(2)
இந்திரன், ப்ரம்மன், நவக்ரகம்
வந்து வணங்கிய திருத்தலம்.. (2)
எங்கும் இலாத ஆனந்த பூமுகம்..
கண்டு வணங்கிட பூக்கும் மனம்..
கங்கைக் கிணையான பஞ்ச தீர்த்தம்…(2)
இந்திரன், ப்ரம்மன், நவக்ரகம்
வந்து வணங்கிய திருத்தலம்.. (2)
எங்கும் இலாத ஆனந்த பூமுகம்..
கண்டு வணங்கிட பூக்கும் மனம்..
க்ஷேத்ரபாலபுரம் என்னும் க்ஷேத்திரம்..- அங்கு
ஆனந்த பைரவரின் சன்னிதானம்..!
ஆனந்த பைரவரின் சன்னிதானம்..!
சரணம் 2
——-
கால பைரவரே மூலவராய்
ஆலயம் கொண்டது இத்தலமே ! (2)
அஷ்டமி நாளிலே கோயிலிலே
அலையென மோதும் கூட்டமே (2)
——-
கால பைரவரே மூலவராய்
ஆலயம் கொண்டது இத்தலமே ! (2)
அஷ்டமி நாளிலே கோயிலிலே
அலையென மோதும் கூட்டமே (2)
எண்ணெய் விளக்கினை ஏற்றி வைத்திட
பில்லி, சூனியங்கள்..ஓடிடுமே ! (2)
க்ஷேத்ரபாலபுரம் என்னும் க்ஷேத்திரம்..- அங்கு
ஆனந்த பைரவரின் சன்னிதானம்..!
தாமரை மலர்போல் மலர்ந்த முகம்..
தாமரை மலர்மேல் அமர்ந்த சிவம் (2)
ஆனந்த கால பைரவம் – சிவ
ஆனந்த கால பைரவம்