அத்தி வரதா ! கோவிந்தா !

வரங்களைத் தரவே வந்தவன் வரதன் !
அவன் பதம் பணிவோம் வாருங்கள் !
கேட்டதைக் கொடுக்கும் வரப்ரசாதி (2)
கண்ணணாய் வந்த பார்த்த சாரதி (2)
அத்தி வரதனே ! கோவிந்தா !
அம்புஜ பாதா ! கோவிந்தா ! (2)
ப்ரம்ம தேவன் வடித்த அத்தி மர சிலையாக…
ஐராவதம் மாறியதே அத்தி வன மலையாக… (2)
வேகவதி வெள்ளத்தினை தடுத்திடும் அணையாக…(2)
அனந்த சயனம் கொண்டான் அன்பரின் துணையாக…(2)
அத்தி வரதா ! கோவிந்தா !
அம்புஜ பாதா ! கோவிந்தா ! (2)
கண்களுக்குத் தெரியாமல் நீருக்குள்ளே இருந்தாலும்
கண்ணாகக் காத்திடுவான் அத்தி வன வரதன் ! (2)
நாற்பது ஆண்டுகள் பின் தந்தான் தரிசனமே ! (2)
கண்கொள்ளாக் காட்சியினைக் கண்டிட பரவசமே (2)
அத்தி வரதா ! கோவிந்தா !
அம்புஜ பாதா ! கோவிந்தா ! (2)