லோகவீரம் தமிழில்
1)
பார் போற்றும் பரம வீரா !
காத்து அருளும் காவல் வீரா !
பார்வதியின் இதயம் நிறைக்கும்..
சாஸ்தாவே நமஸ்காரம் !
சுவாமியே சரணம் ஐயப்பா !
2)
ஹரியின் அரனின் பிரிய மகனே !
எளிதில் வரங்கள் அருளுவோனே !
அரிய மறையோர், அகிலம் போற்றும் …
சாஸ்தாவே நமஸ்காரம் !
சுவாமியே சரணம் ஐயப்பா !
3)
நடை அதிலோ மத யானை !
மனம் அதிலோ மிகும் கருணை !
தடை யாவும் நீக்கி அருளும்
சாஸ்தாவே நமஸ்காரம் !
சுவாமியே சரணம் ஐயப்பா !
4)
எங்கள் குலம் காக்கும் தேவே !
எதிரியோரை அழிக்கும் தேவே !
வேண்டும் வரங்கள் யாவும் அருளும்..
சாஸ்தாவே நமஸ்காரம் !
சுவாமியே சரணம் ஐயப்பா !
5)
கேரளத்தில் லீலை செய்யும்
பாண்ட்ய வம்ச திலகம் நீயே !
கதியிலார்க்கு தஞ்சம் அருளும்…
சாஸ்தாவே நமஸ்காரம் !
சுவாமியே சரணம் ஐயப்பா !
6)
பஞ்சரத்னம் இதை தினமும்
பக்தியோடு சொல்லி வந்தால்..
மிஞ்சும் இன்பம் கொண்டு ஐயன்..
மனதோடு குடியேறுவான்…!
சுவாமியே சரணம் ஐயப்பா !
7)
ஆனைமுகத்தோன் உடன் இருப்பாய்
த்ரயம்பகபுர ராஜ்யம் ஆள்வாய் !
ஆனைமீதில் ஏறி உலவும்..
சாஸ்தாவே ! குல தெய்வமே !
சாமியே சரணம் ஐயப்பா !
8)
மயில் வாகனன் சோதரனே !
மகாதேவன் ஆற்றலோனே !
துயில்மாலன் வழியாய் வந்த…
சாஸ்தாவே ! குல தெய்வமே !
சாமியே சரணம் ஐயப்பா !
9)
தந்தையாக வைத்யநாதன்
அன்னையாக தன்வந்த்ரி நாதன்
பிள்ளையாக வந்த வைத்யா !
சாஸ்தாவே ! கருணாமூர்த்தே !
சுவாமியே சரணம் ஐயப்பா !
10)
பூமி நாதா ! சதானந்தா !
உயிர்கள் காக்கும் கருணை ரூபா !
காக்க வேண்டும்
மகா ப்ரபுவே !
சாஸ்தாவே ! போற்றி ! போற்றி !
சுவாமியே சரணம் ஐயப்பா !