தன்னுள்ளே ஆழ்ந்திருக்கும்
தன்னுள்ளே ஆழ்ந்திருக்கும் திருவுருவே !
தட்சிணா மூர்த்தியே ! ஸ்ரீகுருவே !
தென்முகம் நோக்கும் சிவ உருவே !
தென்முகம் நோக்கும் சிவ உருவே !
சின்மயம் காட்டும் திருவருளே !
(தன்னுள்ளே )
வயதிலே முதிர்ந்த முனியோர்கள்
சீடராய் சூழ்ந்தார் உனைச்சுற்றி !
பொங்கிடும் இளமையில் நீயிருப்பாய்
அவருக்கு குருவாய் வழிகாட்டி !
என்னையும் சீடனாய் தானேற்று..
தந்திடுவாயோ திருக்காட்சி !
(தன்னுள்ளே)
விழுதுகள் மிகுந்த ஆலமரம்
அதனடி உந்தன் எழில் பீடம்
ஞானத்தின் விழுதுகள் தனை விரித்து..
ஞாலத்தில் அறிவின் ஒளியேற்று..!
ஒருசொல் கூட பேசாமல்..
மோனத்தினாலே கற்பித்து…
(தன்னுள்ளே )