ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மங்களாஷ்டகம் தமிழில்
1
மந்தார மலர்விரும்பும் நாதனே !
மயில்மீது ஏறி வரும் தேவனே !
சிவநாதன் பாசமிகு புத்திரனே !
சுப்ரமணிய சுவாமியே ! மங்களமாகட்டும் !
2.
பக்தர்களின் விருப்பங்களை அளிப்பவனே !
பிறவிப்பிணி தீர்த்தருளும் தேவனே !
ராஜாதி ராஜர் தொழும் ராஜனே !
சமர் வீரனானவனே! மங்களமாகட்டும் !
3.
தாரகனை வதமுடித்த தீரனே!
சூரபத்மன் குலமழித்த சூரனே !
பாலகனின் வடிவில் வந்த வீரனே !
சுப்ரமணிய சுவாமியே ! மங்களமாகட்டும் !
4.
மலர்த்தேனை சுற்றிவரும் வண்டுபோல்
மலர்முகத்தாள் வள்ளியினை நாடுவாய்!
பலபலவாய் ரத்தினங்கள் பொதித்ததால்..
பளபளக்கும் மகுடனே ! மங்களமாகட்டும் !
5.
கோடிகோடி காமனையும் விஞ்சிடும்
பேரழகில் ஒளிருகின்ற சுந்தரா !
நாடியவர் விரும்பியவைத் தந்திடும் ..
வஜ்ராயுத பாணியே ! மங்களமாகட்டும்
6.
முக்தியினைத் தந்தருளும் குமரனே !
முத்துமாலை மின்னுகின்ற மார்பனே !
தேவயானை உடனுறைய மகிழ்ந்திடும்
தேவதேவன் ஆனவா ! மங்களமாகட்டும் !
7.
ஜொலிக்குமாடை இடையினோடு பூண்டவா !
கலியின் துயர் தீர்த்தருளிக் காப்பவா !
மாலவனும் வணங்குகின்ற ஆண்டவா !
கார்த்திகேயனானவா ! மங்களமாகட்டும் !
8
சந்திரன்போல் தண்மயத்து முகத்தனே!
மங்கலங்கள் தந்தருளும் தேவனே !
சர வனத்தில் தோன்றிவந்த சூரனே !
சரணடைந்தார் காவலே ! மங்களமாகட்டும் !
9
அஷ்டகமாம் துதியிதனை தினமுமே
இஷ்டமுடன் ஓதிடுவார் யாவரும்..
நலங்களெல்லாம் பெற்று புகழ் ஓங்குவார் !
சுப்ரமணிய சுவாமியின் திருவருளாலே…