ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் – பாராயண மகிமை

அம்பிகையின் நாமங்கள் ஓராயிரம் ! – அதை
நம்பிக்கையாய் சொல்லுவார்க்கு கோடி புண்ணியம் ! (2)
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் (2) – தினம்
செய்திடவே சேர்ந்திடுமே வாழ்வில் மங்கலம்…!
அம்பிகையின் நாமங்கள் ஓராயிரம் ! – அதை
நம்பிக்கையாய் சொல்லுவார்க்கு கோடி புண்ணியம் !
கோடி புண்ணியம் ! கோடி புண்ணியம் !
சரணம் 1
————–
நாரணனின் திருவுருவாம் ஹயக்ரீவரே
மாமுனியாம் அகத்தியர்க்கு அருளிச் செய்தது ! (2)
பூரணமாய் பிணிகள் நீக்கி ஆயுள் கூட்டுமே…(2)- நல்ல
பேறு தந்து பெருவாழ்வு தன்னைக் காட்டுமே…
அம்பிகையின் நாமங்கள் ஓராயிரம் !
சரணம் 2
———
கங்கை ஸ்நானம், அன்னதானம்..அவற்றைக் காட்டிலும்
மங்கலங்கள் மிகுதியாக சேர்க்க வல்லது ! (2)
பாவங்களை போக்கும்எளிய முறையுமானது (2) – தேவி
அம்பிகையின் நாமங்கள் ஓராயிரம் ! – அதை
நம்பிக்கையாய் சொல்லுவார்க்கு கோடி புண்ணியம் !
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் (2) – தினம்
செய்திடவே சேர்ந்திடுமே வாழ்வில் மங்கலம்…!