கல் கருடன் ! – கருட பஞ்சமி

கல் கருடன் ! கருணா சாகரன் !
புள்ளரசன் ! நாரணன் சாதகன் !
உள்ளக் குறை தீர்த்திடுவான் !
வள்ளலென வரம் தருவான் !
திருநரையூர் ஆளுகின்ற நாயகன் !
திருநரையூர் ஆளுகின்ற நாயகன் !
(கல் கருடன்)
உச்சி கால நிவேதனம்
பட்சியாய் வந்து ஏற்பான் !
சத்தியம் என வந்தவரை…
நிச்சயமாய்க் காப்பான் !
தாங்கிடுவேன் கையிலெனும் கோலத்திலே இருப்பான் !
பாங்குடனே பணிந்தவற்குத் துணையுமாகி இருப்பான் !
(கல் கருடன்)
ஆடிமாத பஞ்சமியில்
அவதரித்த சீலன் !
அடிபணிந்து அவன்பணியும்
ஆசான் திருமாலன் !
அஷ்ட நாகம் அணிகலனாய் பூணும் வேத ரூபன் !
இஷ்டமுடன் வேண்டுவோர்க்கு அருளுகின்ற நாதன் !
(கல் கருடன்)